என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை
    X

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை

    போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
    ஈரோடு:

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத் தொகையினை கணக்கிட்டு உடனே வழங்க வேண்டும் போன்ற 9 அம்ச கோரிக்கைகளை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் முன் வைத்தனர்.

    நேற்று தொழிலாளர்கள் மற்றும் அரசு தரப்பில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எட்டவில்லை. முன் கூட்டியே தொடங்கியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இன்று (திங்கட்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    சத்தியமங்கலத்தில் நேற்று மாலையே அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான பஸ்களை தொழிலாளர்கள் பணிமனையில் நிறுத்தி விட்டனர். பஸ்கள் வரும் என பஸ்நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலை மோதியது.



    ஈரோட்டிலும் நேற்று மாலை 6 மணிக்கு மேல் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. இன்றும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த தொழிற்சங்கத்தினர் சார்பில் “இன்று பஸ்கள் ஓடும்” என்ற பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அதே சமயம் மற்ற தொழிற் சங்கத்தினர் “இன்று பஸ்கள் ஓடாது” என்ற நோட்டீசு ஒட்டி இருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. ஈரோட்டிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், பழனி போன்ற வெளியூர்களுக்கு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அந்த பஸ்களில் கூட்டம் இல்லை வழியில் போராட்டம், மறியல் என ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்க கூடும் என அரசு பஸ்களில் செல்ல பயணிகள் தயங்கினர்.
    அதே சமயம் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கோபியில் இருந்து செங்கப்பள்ளிக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. வாய்க்கால் மேடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பஸ்சின் பின்புறம் கற்களை வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்து நொருங்கியது. பயணிகள் கூக்குரலிட்டனர். இதேபோல் பவானி, பெருந்துறை, கொடுமுடி, புளியம்பட்டி, பவானி சாகர், கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. மக்களும் வெளியூர் பயணத்தை தவிர்த்தனர்.
    Next Story
    ×