என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததை கணவர் தட்டிக் கேட்டதால் மனைவி தற்கொலை
    X

    குழந்தைக்கு கழுதை பால் கொடுத்ததை கணவர் தட்டிக் கேட்டதால் மனைவி தற்கொலை

    ஈரோட்டில் தெருவில் விற்ற கழுதை பாலை குழந்தைக்கு கொடுத்ததை கணவர் தட்டிக் கேட்டதால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு, செங்கோடம் பள்ளம், ரூபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி மகாலட்சுமி (வயது39). இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மகாலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது தெருவில் விற்ற கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.  இதை பார்த்த கிருஷ்ணன் "குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுக்கிறாயே ஏதாவது ஆகிவிட்டால் என்ன ஆவது?'' என கூறினாராம்.

    இதனால் கோபம் அடைந்த மகாலட்சுமி படுக்கை அறைக்கு வேகமாக சென்று கதவை தாழ்ப்பாள் போட்டார். இதனால் ஏதோ விபரீதம் நடக்க போகிறது  என்று உணர்ந்த கிருஷ்ணன் கதவை தட்டினார்.

    ஆனால் எந்த ஒரு  பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மகாலட்சுமி தூக்கு மாட்டி கொண்டு உயிருக்காக போராடி கொண்டு இறந்தார்.

    அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×