என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வறண்ட காவிரி ஆற்றில் நின்றவாறு நெடுவாசல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 2- வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 25-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள வறண்ட காவிரி ஆற்றில் நின்றவாறு உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை, தேனி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமானோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதேபோல ஒவ்வொரு நாளும் சமூக ஆர்வலர்கள் பலர் வெளியூர்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போராட்டக்குழு சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 2- வது கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 25-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள வறண்ட காவிரி ஆற்றில் நின்றவாறு உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சென்னை, தேனி மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமானோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதேபோல ஒவ்வொரு நாளும் சமூக ஆர்வலர்கள் பலர் வெளியூர்களில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு போராட்டக்குழு சார்பில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
Next Story






