என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: செங்கோட்டையன் பேச்சு
    X

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: செங்கோட்டையன் பேச்சு

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கார்டில் மாணவர்கள் பற்றிய அனைத்து விவரமும் இருக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

    கோபி:

    கோபி அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் முன் இன்று மே தின விழா நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மே தின கொடி ஏற்றி பேசினார்.

    அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஓய்வூதியம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தொழிலாளர் நலன் காக்க இந்த அரசு பாடுபடும். பள்ளி கல்வித்துறை மறுமலர்ச்சி துறையாக மாற்றி அமைக்கப்படும்.

    பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கார்டில் மாணவர்கள் பற்றிய அனைத்து விவரமும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த அரசு திட்டங்கள் தொடர்ந்து செயல் படுத்தப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்று கூறினார்.

    Next Story
    ×