என் மலர்
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினர் சபலென்கா, கோகோ காப்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் நான்காவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 7-6 (1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடனும், கோகோ காப் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடனும் மோதுகின்றனர்.
Next Story






