என் மலர்
டென்னிஸ்

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் காலிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 6-1 என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜெசிகா பெகுலா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 6-0 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






