என் மலர்
விளையாட்டு

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்
- கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
- ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் 69-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் மத்தியப் பிரதசே மாநிலம் இந்தோர் நகரில் கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் கராத்தே உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில், 69-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அக்ஷய் ராம் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
சாதனைப் படைடத்த கராத்தே வீரர் அக்ஷய் ராமுக்கு தலைமை பயிற்சியாளர் ஷிகான்.டி.நிர்மல்குமா் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story






