என் மலர்
விளையாட்டு

ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா
- 85.29 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
- கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் 'தங்க மகன்' நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த போட்டியில் முதல் மற்றும் கடைசி முயற்சிகள் புள்ளிகள் எடுக்காத நீரஜ் சோப்ரா, இடைப்பட்ட முயற்சிகளில் 83.45, 85.29, 82.17, 81.01 மீட்டருக்கு ஈட்டி எறிந்து அசத்தினார்.
அதில் மூன்றாவது முயற்சியில் 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் 84.12 மீட்டர் தூரமும் கிரெனடா நாட்டை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்து முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தனர்.
முன்னதாக கடந்த வாரம் பாரிசில் நடைபெற்ற டயமண்ட் லீக் தொடல் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story