என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நான் வரேன்..! 15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி
    X

    நான் வரேன்..! 15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி

    • விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
    • 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இதனால் தற்சமயம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

    விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் வராமல் இருந்தது.

    இந்நிலையில் விராட் கோலியும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அவரது மாநில அணியான டெல்லிக்கு விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24-ந் தேதி ஆந்திராவுக்கு எதிராகவும் 26-ந் தேதி குஜராத்துக்கு எதிராகவும் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி ரெயில்வே அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளார்.

    இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி விஜய் ஹசாரே தொடரில் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடரில் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 32 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட போட்டிகளில் பங்கேறவுள்ளன. இதில் மும்பை அணி குரூப் சி பிரிவிலும், டெல்லி அணி குரூப் டி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×