என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த விராட் கோலி
    X

    உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த விராட் கோலி

    • கடைசி போட்டிக்காக இந்திய அணி இந்தூர் சென்றுள்ளார்.
    • உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி விளையாடி வருகிறார்.

    கடந்த 14-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற இருக்கிறது.

    இதற்காக இந்தூர் சென்ற இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை இந்திய அணி வீரரான விராட் கோலி உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் அடித்த விராட் கோலி, இரண்டாவது போட்டியில் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். நாளை வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    Next Story
    ×