என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் தலைமைத்துவம் வெற்றி: இந்திய ஒயிட்பால் அணி கேப்டன் போட்டியில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்
    X

    ஐபிஎல் தலைமைத்துவம் வெற்றி: இந்திய ஒயிட்பால் அணி கேப்டன் போட்டியில் இணைந்த ஷ்ரேயாஸ் ஐயர்

    • ஐபிஎல் தொடரில் 3 அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • ஒருநாள் போட்டியில் விளையாடும் அவர், டி20-யிலும் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். இவர் சமீப காலமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு வரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கேப்டன் பதவியுடன், 17 போட்டிகளில் 604 ரன்கள் குவித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார். 2024-ம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற வைத்தார். தற்போது பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையத்துவம் வெற்றி பெற்றதாக கருதப்படுகிறது. இந்திய சீனியர் அணியில் தற்போது 50 ஓவர் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். ரோகித் சர்மா, விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், வரும் காலங்களில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது.

    ரோகித் சர்மா தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறது. இவருக்கு பின்னால் யார்? கேப்டன் என்ற கேள்வி எழவில்லை.

    சுப்மன் கில், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனுக்கான போட்டியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என பிசிசிஐ எடுக்கும் முடிவில் செல்வாக்குமிக்க நபர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    அந்த நபர் "தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறார். அவரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் கூட விளையாட வைக்காமல் இருக்க முடியாது. கூடுதலாக, தற்போது அதிகாரப்பூர்வமாக ஒயிட் பால் அணி கேப்டனுக்கான போட்டியில் இணைந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×