என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Lockup-ல போட்டாங்க... கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்
    X

    Lockup-ல போட்டாங்க... கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்

    • முதல் ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடித்தார்.
    • சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.

    முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது ரசிகர்கள் ஒருவர் பாதுகாப்பு தடைகளை தாண்டி மைதானத்திற்கு ஓடி வந்த விராட் கோலி கால்களை தொட்டு வணங்கினார். உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.

    இந்நிலையில் அவரை ஜெயில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவக் வெளியாகி உள்ளது. அதில் போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள். எந்த ஸ்டேஷன் என்பது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் கோலி சார் அவர்களை அழைத்து பேசியவுடன், நான் விடுவிக்கப்பட்டேன் என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    Next Story
    ×