என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி: சொந்த ஊரிலும் சொதப்பிய  சஞ்சு சாம்சன்
    X

    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டி: சொந்த ஊரிலும் சொதப்பிய சஞ்சு சாம்சன்

    • 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. .
    • சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

    கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×