என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலக கோப்பை வெற்றியை சக்கர நாற்காலியில் வந்து கொண்டாடிய பிரதிகா ராவல்
    X

    மகளிர் உலக கோப்பை வெற்றியை சக்கர நாற்காலியில் வந்து கொண்டாடிய பிரதிகா ராவல்

    • உலக கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக பிரதிகா ராவல் வெளியேறினார்.
    • பிரதிகா ராவல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருந்தார்

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், உலக கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய பிரதிகா ராவல், சக்கர நாற்காலியில் அழைத்து வந்து இந்திய மகளிர் அணியினர் வெற்றியை கொண்டாடினர்.

    பிரதிகா ராவல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடி 308 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×