என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விராட் கோலியை பூ கொடுத்து வரவேற்ற மழலைகள்- வைரல் வீடியோ
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்கிறது.
- இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி ராய்பூர் சென்றடைந்தது.
டெஸ்ட் தொடரை தொடந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர். இந்நிலையில் அங்கு இந்திய வீரர் விராட் கோலியை குழந்தைகள் பூ கொடுத்து வரவேற்றனர். அவர்களின் அன்பு பரிசை ஏற்ற விராட் கோலி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து விடை பெற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story






