என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    தோல்விகளை சந்தித்தாலும் அதிரடியாக விளையாடுவதை மாற்ற மாட்டோம்- ஐதராபாத் பயிற்சியாளர்
    X

    தோல்விகளை சந்தித்தாலும் அதிரடியாக விளையாடுவதை மாற்ற மாட்டோம்- ஐதராபாத் பயிற்சியாளர்

    • நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம்.
    • இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    விசாகப்பட்டினம்:

    தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2 தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் போக்கை கடைபிடித்து வரும் அந்த அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்தது. ஆனால் கடந்த 2 போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது.

    இந்த நிலையில் ஐதராபாத் அணி பயிற்சியாளர் வெட்டோரி கூறியதாவது:-

    அதிரடியாக விளையாடும் போக்கை மாற்றுவது பற்றி எந்த உரையாடலும் நடக்கவில்லை. அந்த போக்கை நாங்கள் மாற்ற மாட்டோம். நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம். எங்கள் முதல் 3 பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்த்தால் அது உங்களுக்கு தெரியும்.

    இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று நான் நம்புகிறேன். 18 ஐ.பி.எல். சீசன்களின் போக்கைப் பார்த்தால், தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடையாத அணிகள் மிகக் குறைவு.

    சீசனின் தொடக்கத்தில் ஐதராபாத் இருக்கும் நிலை ஒரு பின்னடைவு அல்ல. நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகச் சிறந்த அணி, நன்கு திட்டமிடப்பட்ட அணிகள் மற்றும் மிகவும் திறமையான வீரர்களை எதிர்கொள்கிறோம். நாங்கள் திரும்பி வந்து வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாங்கள் விரும்பும் பாணியில் தொடர்ந்து விளையாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×