என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025- 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது குஜராத்
- டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
- கொல்கத்தா அணியில் ரஹானே 50 ரன்களில் வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் ரஹானேவை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரஹானே மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்திருந்தார். குர்பாஸ் 1 ரன்களும், நரைன் 17 ரன்களும், வெங்கடேஷ் 14 ரன்களும், சிங் 1 ரன்களும் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.