என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெல்லி சென்ற இந்திய அணி.. குத்தாட்டம் போட்ட சூர்யகுமார் யாதவ்- வைரல் வீடியோ
- இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
- இதற்காக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டெல்லி சென்றது.
புதுடெல்லி:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது. இதற்காக இந்திய அணி டெல்லி சென்றது. அங்கு அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு நடைப்பெற்றது. இதை பார்த்த சூர்யகுமார் குத்தாட்டம் போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






