என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாட வங்கதேசம் செல்கிறது இந்திய அணி
    X

    ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாட வங்கதேசம் செல்கிறது இந்திய அணி

    • இந்தியா- வங்கதேசம் இடையில் ஒருவரும் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • செப்டம்பர் மாதம் மீண்டும் தொடரை தொடங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.

    இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக வங்கதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    ஆனால், தற்போது வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், பிசிசிஐ இந்திய அணியை அனுப்ப சம்மதம் தெரிவிக்குமா? என்பது சந்தேகம்தான்.

    மீடியாக்கள் தகவலின்படி, செப்டம்பர் 1, 3 மற்றும் 6-ந்தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் செப்டம்பர் 9, 12, 13-ந்தேதிகளில் டி20 போட்டிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி ஆகஸ்ட் 28-ந்தேதி வங்கதேசம் சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா- வங்கதேசம் இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை போட்டிகளை ஒத்திவைக்க இரு நாட்டின் கிரிக்கெட் போர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடருக்காக, 2026 செப்டம்பரில் இந்தியாவை வரவேற்பதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்தத் சுற்றுப் பயணத்திற்கான திருத்தப்பட்ட தேதிகள் மற்றும் போட்டி அட்டவணைகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×