என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆடும் லெவன் குறித்து மெசேஜ் அனுப்புகிறேன்: சஞ்சு சாம்சன் குறித்த கேள்விக்கு சூர்யகுமார் யாதவ் பதில்..!
- சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தொடக்க வீரர் சஞ்சு சாம்சனா?, சுப்மன் கில்லா? என கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. நாளை இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் களம் இறங்குவது உறுதியாக உள்ளது. அவர் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இதனால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ் "Sir, ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை உங்களுக்கு மெசேஜ் செய்வேன். உண்மையிலேயே அவரை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம். நாளை நாங்கள் சரியான முடிவை எடுப்போம்" என்றார்.
சஞ்சு சாம்சனும், சுப்மன் கில்லும் அணியில் இடம் பிடித்தால் யார் தொடக்க வீரராக களம் இறங்குவது? என்பதிலும் சிக்கல் நீடிக்கும்.






