என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் டெஸ்ட் 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை: ரிஷப் பண்ட் சதம், கருண் நாயர் டக்- இந்தியா 454/7
    X

    முதல் டெஸ்ட் 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை: ரிஷப் பண்ட் சதம், கருண் நாயர் டக்- இந்தியா 454/7

    • சுப்மன் கில் 147 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ரிஷப் பண்ட் 134 ரன்கள் விளாசினார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.

    ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.

    ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து சுப்மன் கில் 150 ரன்னைக் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பசீர் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்று பவுண்டரில் லைனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    சுப்மன் கில் 227 பந்தில் 19 பவுண்டரி, 1 சிக்சருடன் 147 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்தது. சுப்மன் கில்- ரிஷப் பண்ட் ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது.

    5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். கருண் நாயர் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 8 வருடம் கழித்து களம் இறங்கிய கருண் நாயருக்கு மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது.

    6ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 178 பந்தில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 12 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 1 ரன்னில் வெளியேறினார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    2ஆவது நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்கள் எடுத்துள்ளது. கில் ஆட்டமிழக்கும்போது இந்தியா 430 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கடைசி 25 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    Next Story
    ×