என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எனக்கு பும்ரா பற்றி எல்லாமே தெரியும், அவரால் என்னை எதுவும் செய்ய முடியாது- ஓவரா வாய்விட்ட பென் டக்கெட்
    X

    எனக்கு பும்ரா பற்றி எல்லாமே தெரியும், அவரால் என்னை எதுவும் செய்ய முடியாது- ஓவரா வாய்விட்ட பென் டக்கெட்

    • சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
    • முகமது சமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

    அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். அத்துடன் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தியா நாங்கள் தோற்கடிக்க வேண்டிய அணி. எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல தொடராக இருக்கும்.

    நான் பும்ராவை 5 டெஸ்ட் தொடர்களில் எதிர்கொண்டுள்ளேன். அவர் எனக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். அதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அவரிடம் என்ன திறமைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். என்னை ஆச்சரியப்படுத்தும் எதுவும் இருக்கப்போவதில்லை. அவரை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்.

    முகமது சமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் அவர்களுடைய தொடக்க கட்ட பந்துவீச்சை என்னால் கடந்து செல்ல முடிந்தால் நிறைய ரன்கள் அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு டக்கெட் கூறினார்.

    Next Story
    ×