என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு

X
ரிஷப் பண்ட் - கலீல் அகமது
டெல்லி அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் - கலீல் அகமது நம்பிக்கை
By
மாலை மலர்31 March 2022 10:45 AM GMT (Updated: 31 March 2022 10:45 AM GMT)

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் என வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 ஆண்டும் பிளேஆப் சுற்றில் இடம் பெற்றது. ஆனால் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல் கோப்பையை இதுவரை ராஜஸ்தான், ஐதராபாத், சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய அணிகள் மட்டுமே வென்றுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் என கலீல் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 4 சீசனில் சன்ரைசரஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய கலீல் அகமதுவை ஏலத்தின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5.25 கோடிக்கு வாங்கியது.
டெல்லி அணிக்கான முதல் போட்டியில் கலீல் அகமது மும்பை அணிக்கு எதிராக விளையாடினார். அந்த போட்டியில் கலீல் அகமது 4 ஓவர்களை வீசி 27 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலீல் அகமது கூறியதாவது:-
ரிஷப் பண்ட் ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனான அவரின் திட்டம் பந்து வீசுவதில் எனக்கு உதவியாக உள்ளது.
ரிஷப் பண்டை தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக தெரியும். அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான். இரண்டு பேரும் ஒன்றாகதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினோம். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் வீரர் ஆவார். உங்கள் கேப்டனை நீங்கள் அறிந்தால் அவருடன் பல திட்டங்களை சிறப்பாக திட்டமிடலாம். ரிஷப் பண்ட்-வுடன் மீண்டும் இணைவதில் உற்சாகமாக இருக்கிறேன்.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரிஷப் திறமையான கேப்டன் மற்றும் டெல்லி அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...நெய்மர் பாணியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆர்சிபி வீரர் ஹசரங்கா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
