என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
லோகேஷ் ராகுல் ரன்கள் குவிக்கும் கேப்டனாக செயல்பட வேண்டும்- லக்னோ அணி ஆலோசகர் காம்பீர் சொல்கிறார்
Byமாலை மலர்23 March 2022 7:10 AM GMT (Updated: 23 March 2022 7:10 AM GMT)
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம் என லக்னோ அணி ஆலோசகர் காம்பீர் கூறியுள்ளார்.
லக்னோ:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் புதிய அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் விளையாடுகிறது.
லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் உள்ளார்.
லக்னோ தலைமை உள்ளிட்டவைகள் குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது:-
என்னை பொறுத்தவரை கேப்டனாக இருக்கும் ராகுலைவிட, பேட்டிங்கில் ரன் குவிக்கும் கேப்டனாக இருக்கும் ராகுலாக இருப்பது முக்கியம். ராகுல் தனது அணுகுமுறையில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக அவருக்கு எல்லா சுதந்திரமும் கிடைக்கும்.
எந்தவொரு கேப்டனும் துணிச்சலான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
அதுபோன்று ராகுல் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் ரிஸ்க் எடுக்காவிட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்களா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாது. குயிண்டன் டி காக் விக்கெட் கீப்பராக செயல்படுவார். ஆனால் லோகேஷ் ராகுல் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் கவனம் செலுத்துவார். தேசிய அணியில் இடம் பெறுவதற்காக நீங்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டும் என்று நான் ஒரு போதும் நம்பவில்லை.
ஐ.பி.எல். என்பது ஒருவரின் காயத்தை வெளிப்படுத்தும் ஒரு தளம். ஒருவர் கேப்டனாக வளர முடியும். ஆனால் ஐ.பி.எல். போட்டி நீங்கள் இந்திய அணி கேப்டனாவதற்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...டோனிக்கு பிறகு நான்கு வீரர்களால் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட முடியும்- ரெய்னா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X