என் மலர்
விளையாட்டு

ஸ்ரேயாஸ் அய்யர்
நான் வீரர்களின் கேப்டன் - ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து
முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் நான் இப்போது அனுபவமுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஓயிட் வாஷ் செய்தது. இந்த மூன்று ஆட்டங்களில் மும்பை வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடியதுடன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் அய்யரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடிக்கு வாங்கியதுடன் அவரை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்நிலையில் தாம் ஒரு வீரர்களின் கேப்டன் என்று ஸ்ரேயாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நான் அடுத்தது வித்தியாசமான மனநிலையுடன் விளையாடுவேன். முடிவெடுக்கும் திறன் மற்றும் கேப்டன்ஷிப் திறன்களின் அடிப்படையில் நான் இப்போது மிகவும் முதிர்ச்சியடைந்து அனுபவமுள்ளவனாக இருக்கிறேன்.
அணியில் உள்ள ஒவ்வொரு தனிநபருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். உண்மையில் அணிக்கு வேறு மட்டத்தில் செயல்பட்டு உதவுகிறேன்.
உங்களுக்கு தெரியும், நான் கே.கே.ஆர். குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு மகத்தான உணர்வு. அனைத்து சிறந்த வீரர்களும் செய்த பணியை நான் மிகவும் பாராட்ட விரும்புகிறேன். கே.கே.ஆருக்காக அவர்கள் உருவாக்கிய அதே அடிச்சுவடுகளைப் பின்பற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






