என் மலர்tooltip icon

    விளையாட்டு

    லக்னோ அணி வீரர்கள்
    X
    லக்னோ அணி வீரர்கள்

    ஐ.பி.எல்: புதிதாக களமிறங்கும் லக்னோ அணியின் பெயர் இது தான்..

    லக்னோ அணி ஏலத்திற்கு முன் கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னாய் ஆகிய வீரர்களை தேர்வு செய்துள்ளது.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.

    இந்த தொடரில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு 'லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

    லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.

    மேலும் ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலும் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.  

    லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா

    இதில் லக்னோ அணி கே.எல் ராகுலை ரூ. 17 கோடிக்கு தேர்வு செய்துள்ளது. இவர் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ரூ. 9.2 கோடி) மற்றும் ரவி பிஷ்னாய் (ரூ. 4 கோடி) ஆகியோரும் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஏற்கெனவே,  2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றபோது புனே அணியை பெற்றிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை பெற்றுள்ள கோயங்கா, இதற்கும் சூப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார்.

    Next Story
    ×