என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
கேப்டன் பதவியில் இருந்து விலக கோலி கட்டாயப்படுத்தப்பட்டார்: சோயிப் அக்தர்
Byமாலை மலர்24 Jan 2022 7:26 AM GMT (Updated: 24 Jan 2022 7:26 AM GMT)
விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் மற்றவர்களைவிட அவர் நிறைய சாதித்துள்ளார் என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். உலக கோப்பை போட்டிக்கு முன்பு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலி விலகினார். அவரது 7 ஆண்டுகால கேப்டன்ஷிப் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலகுமாறு விராட் கோலி கட்டாயப் படுத்தப்பட்டார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து தானாக விட்டு செல்லவில்லை. அவர் அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். கேப்டன்ஷிப்பை அவர் துறப்பதற்கான சரியான நேரம் இது இல்லை.
விராட் கோலி ஒரு சிறந்த மனிதர், சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக்கெட் உலகில் மற்றவர்களைவிட அவர் நிறைய சாதித்துள்ளார். அவர் அவரது பாணியில் இயல்பாக இன்னும் சில ஆண்டுகள் விளையாட வேண்டும்.
விராட் கோலி எல்லா கசப்புணர்வுகளையும் மறந்துவிட்டு, அனைவரையும் மன்னித்து விட்டு முன்னேறி சென்று விளையாட வேண்டும். அவர் இரும்பால் ஆனவர் என்பதை நிரூபிக்க வேண்டிய தருணமாகும்.
இவ்வாறு சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
இதற்கிடையே டெஸ்ட் கேப்டன் பதவியில் விராட் கோலி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X