என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
கடைசி டெஸ்டில் கோலி விளையாடுவாரா? லோகேஷ் ராகுல் விளக்கம்
Byமாலை மலர்7 Jan 2022 5:44 AM GMT (Updated: 7 Jan 2022 5:44 AM GMT)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாக விளையாடாத விராட் கோலி 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடவில்லை. முதுகுவலி காரணமாக அவர் அப்போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து 2-வது டெஸ்டுக்கு லோகேஷ் ராகுல் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து லோகேஷ் ராகுல் கூறும்போது, விராட் கோலி வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஏற்கனவே நன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்.
சில நாட்களாக அவர் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டு நன்கு ஓடுகிறார். அவர் 3-வது டெஸ்டுக்கு உடல் தகுதி பெற்றுவிடுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
அதேபோல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கூறும்போது, விராட் கோலி வலைப்பயிற்சியில் நன்றாக செயல்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X