என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸ்: இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட்
Byமாலை மலர்3 Jan 2022 2:21 PM GMT (Updated: 3 Jan 2022 2:21 PM GMT)
தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஜோகன்னஸ்பெர்க்:
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. முதுகு வலி காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவில்லை. கே.எல். ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.
டாஸ் வென்ற கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க ஜோடியாக களமிறங்கிய கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. இதையடுத்து மயங்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, அடுத்தடுத்து வந்த புஜாரா 3, ரஹானே 0, விஹாரி 20, ராகுல் 50, பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஸ்வின் நிதானமாக ஆடி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முகமது ஷமி 9, பும்ரா 14, சிராஜ் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்தியா 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜென்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராபாடா, ஆலிவியர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X