search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கங்குலி
    X
    கங்குலி

    கொரோனாவில் இருந்து மீண்டார் கங்குலி- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

    கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதும் அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு (வயது 49), கடந்த திங்கட்கிழமை இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில், சவுரவ் கங்குலி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

    கொரோனாவில் இருந்து குணமடைந்த போதும் சவுரவ் கங்குலி அடுத்த 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. அதன்பின்னர் அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்.
    Next Story
    ×