search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, ரகானே, புஜாரா
    X
    விராட் கோலி, ரகானே, புஜாரா

    கோலியின் கேப்டன் பதவி குறித்து ரகானே, புஜாரா அதிருப்தி - கிரிக்கெட் வாரிய செயலாளரிடம் முறையீடு

    உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி மீது ரகானே, புஜாரா ஆகியோர் அதிருப்தி அடைந்தனர் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

    இறுதிப்போட்டியில் ஏற்பட்ட இந்த தோல்வி தொடர்பாக கேப்டன் விராட் கோலி மீது ரகானே, புஜாரா ஆகியோர் அதிருப்தி அடைந்தனர்.

    அவரது செயல்பாடுகள் குறித்து இருவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷாவை தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

    உலக டெஸ்ட் இறுதிப் போட்டி முடிந்தபிறகு இந்திய வீரர்களுக்கு நிறைய நாள் ஓய்வு இருந்தது. அதன் பிறகே இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த காலக்கட்டத்தில்தான் இருவரும் ஜெய்ஷாவிடம் கோலியின் கேப்டன் பதவி குறித்து முறையிட்டு உள்ளனர்.

    இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பதால் கோலியின் கேப்டன் திறன் பாதிக்கப்படுவதாக கருதப்பட்டது. இதன் காரணமாகவே அவர் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

    ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்டில் தொடர்ந்து கேப்டனாக அவர் பணியாற்றுவார்.

    Next Story
    ×