என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனி விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் விராட் கோலி, முகமது சிராஜ்
Byமாலை மலர்11 Sep 2021 3:12 PM GMT (Updated: 11 Sep 2021 3:12 PM GMT)
இங்கிலாந்தில் இருந்து பாதுகாப்பாக விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை அழைத்து வர சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது ஆர்சிபி.
மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அணி வீரர்கள் அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற இந்திய வீரர்களைத்தவிர மற்றவர்கள் அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை அமீரகம் அழைத்துவர அனைத்து ஐ.பி.எல். அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. ஆர்.சி.பி. அணி கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரை தனி விமானம் மூலம் இங்கிலாந்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வர ஆர்சிபி அணி முடிவு செய்துள்ளது.
ஆர்.சி.பி. ஏற்பாடு செய்துள்ள தனி விமானம் மூலம் இருவரும் நாளை அமீரகம் சென்றடைகிறார்கள். ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தனி விமானம் மூலம் அமீரகம் சென்றடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X