search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டிஎன்பிஎல் போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க திட்டம் - இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி கேட்டு கடிதம்

    5-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.) சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதுவரை 4 டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறையும் (2017, 2019), டுட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகியவை தலா ஒரு தடவையும் டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியுள்ளன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்

    5-வது டி.என்.பி.எல். போட்டி கடந்த ஆண்டு ஐ.பி.எல். முடிந்த பிறகு டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் போட்டியை நடத்த முடியவில்லை. இதனால் டி.என்.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    5-வது டி.என்.பி.எல். போட்டியை இந்த ஆண்டு நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி ஜூன் 4-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியை நடத்த விரும்புகிறது.

    இதற்கான அனுமதியை கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. இதை டி.என்.சி.ஏ. செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பாதுகாப்பு வளையத்துடன் 4 நகரங்களில் டி.என்.பி.எல். போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×