என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிப்பு
Byமாலை மலர்29 March 2021 4:04 AM GMT (Updated: 29 March 2021 4:04 AM GMT)
சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தமிழகத்தை சேர்ந்தவருமான 40 வயதான பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். லேசான அறிகுறி தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்துவிதமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் பத்ரிநாத் ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெண்டுல்கர், யூசுப் பதான் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அதே அணிக்காக ஆடிய பத்ரிநாத்தும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X