search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்டியா
    X
    சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்டியா

    கடைசி போட்டியில் 329 ரன்கள் குவித்தது இந்தியா -தொடரை வெல்ல பலப்பரீட்சை

    ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 330 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    புனே:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
     
    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும், ரோகித் சர்மா 37 ரன்களும், ஷர்துல் தாகூர் 30 ரன்களும் அடித்தனர்.  இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து 330 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஜேசன் ராய் 14 ரன்களிலும்,  ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் வெளியேறினர். இந்த இரு விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸ்-டேவிட் மாலன் ஜோடி நிதானமாக விளையாடியது.
    Next Story
    ×