என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். பயிற்சி முகாமில் பங்கேற்க டோனி சென்னை வருகை
Byமாலை மலர்4 March 2021 8:14 PM GMT (Updated: 4 March 2021 8:14 PM GMT)
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது.
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. போட்டிக்கான இடம், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்துதலின் போது தங்களது அறையை விட்டு வெளியே வர அனுமதி இ்ல்லை. அத்துடன் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வர வேண்டும். அதன் பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் அணியின் 2 வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த முறை கூடுதல் விழிப்புடன் செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வீரர்களுக்கான பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி தொடங்க இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது போட்டிகள் இன்றி ஆயத்தமாக உள்ள வீரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. போட்டிக்கான இடம், தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார்.
அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்துதலின் போது தங்களது அறையை விட்டு வெளியே வர அனுமதி இ்ல்லை. அத்துடன் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வர வேண்டும். அதன் பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் அணியின் 2 வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த முறை கூடுதல் விழிப்புடன் செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வீரர்களுக்கான பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி தொடங்க இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது போட்டிகள் இன்றி ஆயத்தமாக உள்ள வீரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X