search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம்: ஐசிசி விருதுகளை வென்ற விராட் கோலி சொல்கிறார்

    ஐசிசி-யின் கடந்த 10 ஆண்டுகளில சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த வீரர் விருதுகளை வென்ற விராட் கோலி, இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வீரர்களை அறிவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றார்.

    ஐசிசி விருது குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எனக்கு, இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. களம் இறங்கி நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×