என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டன் பதவியால் ரகானே தடுமாறமாட்டார்: கவாஸ்கர்
Byமாலை மலர்14 Dec 2020 4:05 PM GMT (Updated: 14 Dec 2020 4:05 PM GMT)
விராட் கோலி இல்லாததால் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் பதவியை ஏற்க இருக்கும் ரகனேவுக்கு நெருக்கடி இருக்காது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் விராட் கோலி விளையாடுகிறார். மற்ற மூன்று போட்டிகளில் ரகானேதான் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
கேப்டன் பதவி நெருக்கடியால் ரகானே தடுமாற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏற்கனவே கேப்டன் பதவியில் வெற்றியை ருசித்துள்ள ரகானேவுக்கு நெருக்கடி இல்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘கேப்டன் பதவியால் ரகானேவுக்கு உண்மையிலேயே நெருக்கடி இல்லை. ஏனென்றால் இரண்டு முறை, அதாவது இரண்டு போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சாலாவிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
அதனால் கேப்டன் பதவியை பொறுத்தவரைக்கும் அவருக்கு நெருக்கடி இல்லை. ஏனென்றால், மூன்று போட்டியிலும் பொறுப்பு கேப்டன்தான் என்பது அவருக்குத் தெரியும். ஆகையால் கேப்டன் பதவியை என்ற சிந்தனை சுமந்து செல்வார் என நான் பார்க்கவில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X