என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி நடராஜனுக்கு இது கிடைக்க வேண்டும்: ஹர்பஜன் சிங் சொல்கிறார்
Byமாலை மலர்7 Dec 2020 11:14 AM GMT (Updated: 7 Dec 2020 11:14 AM GMT)
டி நடராஜனுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தால், அது அவரின் தன்னம்பிக்கையை உயர்த்தும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள டி நடராஜன் யாரும் எதிபார்க்காத வகையில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். அறிமுகமான ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் சாய்த்தார்.
அதேபோல் அறிமுகமான முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டும், நேற்றைய 2-வது போட்டியில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இரண்டு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெறும் வாய்ப்பை இழந்தார்.
விருதை இழந்தாலும் ஒட்டுமொத்தமாக அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்துள்ளார். பாராட்டு மழையில் குவிந்து வரும் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்க வேண்டும். அது அவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘நான் நடராஜனுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய வாழ்க்கை சூழ்நிலையில், இந்த பெர்பார்மன்ஸ் நம்பமுடியாத வகையில் உள்ளது. நம்பிக்கை வைத்து கடுமையாக உழைத்து, உங்களுக்குள்ளேயே நம்பிக்கை வளர்த்தால் எல்லாமே சாத்தியம்தான்.
இந்திய தொடரில் அபாரமாக பந்து வீசியுள்ளார். இந்த தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய தூணாக அமைந்துள்ளார். இந்தியாவுக்கு தேவையான போதெல்லாம் விக்கெட் வீழ்த்தி கொடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். நான் ஸ்கிரீனில் பார்த்தபோது, பந்து அடிபட்டாலும் கவலைப்படவில்லை. அந்த அளவிற்கு தன்னம்பிக்கை உள்ளவராக உள்ளார். இது மிகவும் சிறப்பானது. இக்கட்டான நிலையில் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியா மண்ணில் தொடர் நாயகன் விருதை பெற்றால் அவரது நம்பிக்கையை உயர்த்துவதாக இருக்கும். இது இந்திய அணிக்கும் மிகப்பெரியதாக இருக்கும். அவர் எங்கிருந்து வந்தார், அணிக்காக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது சிறந்த கதை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X