என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்
Byமாலை மலர்30 Nov 2020 12:35 PM GMT (Updated: 30 Nov 2020 12:35 PM GMT)
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், டெஸ்ட் தொடரில் சவாலாக இருப்பார் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்டீவ் ஸ்மித்துதான். இவர் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இதே ஃபார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் அது இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு கடும் திண்டாட்டம்தான் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதை இந்திய மக்களவை எம்.பி.யுமான கவுதம் கம்பிர் இதுகுறித்து கூறுகையில் ‘‘இரண்டு சதங்களும் ஸ்மித்திற்கு மிகவும் அட்டகாசமான ஆட்டம். அவர் விராட் கோலியிடம் இருந்து வெகுதூரத்தில் இல்லை.
நாம் விராட் கோலியை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர் என்கிறோம். ஸ்மித் அதில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. 18 ஓவரில் சதம், அடுத்தடுத்து 62 பந்தில் சதம் என்பது வெறும் ஜோக் அல்ல. விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் ஸ்மித் ஆதிக்கம் செலுத்தினார்.
ஸ்மித்தின் ஃபார்ம் இந்தியாவுக்கு கடினமானதாகிவிடும். 3-வது போட்டியில் கூட ஆதிக்கம் செலுத்தலாம். மிக நீண்ட தொடரில் இது தொடக்கம்தான். ஸ்மித்தை அவுட்டாக்குவதற்கான வழியை கண்டுபிடிக்க வில்லை என்றால், பவுலருக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கிவிடும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X