என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது போட்டியிலும் 62 பந்தில் சதம்: இந்தியாவுக்கு எதிராக ரன் மெஷினாக திகழும் ஸ்மித்
Byமாலை மலர்29 Nov 2020 10:16 AM GMT (Updated: 29 Nov 2020 10:16 AM GMT)
சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (83), ஆரோன் பிஞ்ச் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 64 பந்தில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் விளாசினார். 62 பந்தில் சதம் அடித்தார். ஏற்கனவே நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 62 பந்தில் சதம் அடித்து அதிகவேகமாக சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்றும் 62 பந்தில் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் பேட்டிங் மிகவும் அபாரமாக உள்ளது. தற்போது அடுத்தடுத்து இரண்டு சதம் விளாசியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக கடைசி ஐந்து இன்னிங்சில் 69, 98, 131, 105, 104 ரன்கள் விளாசியுள்ளார்.
இந்தியா என்றாலே அபாரமான பேட்டிங் திறமையை ஸ்மித் வெளிக்காட்டி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X