என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் நடராஜன்
Byமாலை மலர்26 Nov 2020 7:38 PM GMT (Updated: 26 Nov 2020 7:38 PM GMT)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி 20, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்திய வீரர்களின் 14 நாள் கோரன்டைன் முடிவடைந்தது. யாருக்கும் கொரோனா பாசிட்டிவ் இல்லை.
இதற்கிடையே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டம் சிட்னியில் இந்திய நேரப்படி காலை 9.10 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றியோடு தொடரை தொடங்க வேண்டும் என இந்திய அணி விரும்பும். பேட்டிங்கில் விராட் கோலி, தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர்.
சொந்த மண்ணில் பலத்தை காட்ட ஆஸ்திரேலியா துடிக்கும். இதனால் முதல் போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் தமிழக வீரர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என பிசிசிஐ நேற்று நள்ளிரவு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், நவ்தீப் சைனிக்கு ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஒருநாள் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X