என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2021 சீசனில் எம்எஸ் டோனி கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை: சஞ்சய் பாங்கர்
Byமாலை மலர்15 Nov 2020 11:09 AM GMT (Updated: 15 Nov 2020 11:09 AM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எம்எஸ் டோனி, அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து பேசினார்கள்.
அப்போது சஞ்சய் பாங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வாய்ப்பில்லை. சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், ‘‘2011 உலக கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றினால், அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என கடுமையான தொடர் வரவிருக்கும் நேரத்தில், கேப்டன் பதவிக்கான நபர் தயாராகி விடமாட்டார் என்பதால், சுமையை குறைக்க சரியான நேரத்தில் விராட் கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும்.
அந்த வகையில் எம்எஸ் அடுத்த வரும் சென்னை அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என உணர்கிறேன். வீரராக இடம் பிடித்து டு பிளிஸ்சிஸிடம் கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். அவரின் கீழ் மாற்றங்கள் நடக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X