என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயம் குறித்து மக்கள் புரிந்து கொள்ளாமல் தேவையற்று பேசுகிறார்கள்: பிசிசிஐ தலைவர் கங்குலி
Byமாலை மலர்13 Nov 2020 5:48 PM GMT (Updated: 13 Nov 2020 5:48 PM GMT)
மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் பேசுகிறார்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் சர்ச்சை. ரோகித் சர்மா காயத்தால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அணியில் சேர்க்கப்பட்டார். சகா காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழும்பிய நிலையில் வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் காயம் குறித்து புரிந்து கொள்ளாமல் மக்கள் தேவையற்று பேசுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘வீரர்கள் காயம் குறித்து யாருக்குத் தெரியும்?. எங்களுக்குத் தெரியும், இந்திய பிசியோவிற்குத் தெரியும். என்சிஏ-வுக்குத் தெரியும். பிசிசிஐ எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து மக்களுக்கு தெரியும். பிசிசிஐ டிரைனர்ஸ், பிசியோ, சகா ஆகியோருக்கு தெரியும். அவருக்கு இரண்டாம் நிலை ஹாம்ஸ்டிரிங் பிரச்சினை உள்ளது. மக்கள் காயம் குறித்து புரிந்து கொள்ளவில்லை. அதனால் தேவையில்லாமல் பேசுகிறார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X