என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் : ரஷிய வீரர் மெட்விடேவ் ‘சாம்பியன்’
Byமாலை மலர்8 Nov 2020 10:03 PM GMT (Updated: 8 Nov 2020 10:03 PM GMT)
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
பாரீஸ்:
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) அரைஇறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் டேனில் மெட்விடேவிடம் (ரஷியா) மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வெரேவ் கைப்பற்ற, அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்ட மெட்விடேவ் கடைசி இரு செட்டை வசப்படுத்தினார். 2 மணி 7 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் மெட்விடேவ் 5-7, 6-4, 6-1 என்ற செட்டில் ஸ்வெரேவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார். பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த 4-வது ரஷிய வீரர் என்ற பெருமையை பெற்ற 24 வயதான மெட்விடேவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2-வது இடம் பிடித்த ஸ்வெரேவ் ரூ.1¼ கோடி பரிசும், 600 தரவரிசை புள்ளிகளும் பெற்றார்.
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) அரைஇறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் டேனில் மெட்விடேவிடம் (ரஷியா) மோதினார். இதில் முதல் செட்டை ஸ்வெரேவ் கைப்பற்ற, அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்ட மெட்விடேவ் கடைசி இரு செட்டை வசப்படுத்தினார். 2 மணி 7 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் மெட்விடேவ் 5-7, 6-4, 6-1 என்ற செட்டில் ஸ்வெரேவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச்சென்றார். பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை ருசித்த 4-வது ரஷிய வீரர் என்ற பெருமையை பெற்ற 24 வயதான மெட்விடேவுக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. 2-வது இடம் பிடித்த ஸ்வெரேவ் ரூ.1¼ கோடி பரிசும், 600 தரவரிசை புள்ளிகளும் பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X