search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பண்ட்
    X
    ரிஷப் பண்ட்

    பாதி கிணறு தாண்டிய நிலையில் டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிக்கு இப்படி ஒரு சோதனையா?

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயத்தில் சுமார் ஒரு வாரம் விளையாடமாட்டார் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்ட் காயம் அடைந்ததால் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை.

    ரிஷப் பண்ட் இல்லாததால் அணியின் காம்பினேசனில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் தள்ளப்பட்டது. ஒரே நேரத்தில் ஹெட்மையர், ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு பவர் ஹிட்டரை டெல்லி இழந்தது. மும்பை அணிக்கெதிராக டெல்லி அணி கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும. இதற்கு இவர்கள் இல்லாததுதான் முக்கிய காரணம்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் குணமடைவதற்கு ஒருவார காலம் ஆகும் என டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் காயம் குறித்த எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. நான் டாக்டரிடம் பேசினேன். அவர் ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் எனக் கூறினார். அவர் விரைவில் வலுவான வகையில் அணிக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

    மும்பை தோல்வி குறித்து ஷ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ‘‘நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்துள்ளோம். 170 முதல் 175 ரன்கள் அடித்திருந்தால் முற்றிலும் போட்டி மாறியிருக்கும்’’ என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×