என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடும்பத்துக்கு மிரட்டல் - டோனியின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராஞ்சி:
ஐ.பி.எல். போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. அந்த அணி இதுவரை 7 ஆட்டத்தில் விளையாடி 5-ல் தோற்றது. 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த 7-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்னில் தோற்றது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.
இதற்கிடையே இந்த தோல்வி காரணமாக சமூக வலைதளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் சிலர் டோனியின் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த மிரட்டல் காரணமாக டோனியின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள அவரது வீடு மட்டும் பண்ணை வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வீடுகளுக்கு முன்பு தடுப்பு கட்டைகளை வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 வீடுகளிலும் தலா 10-க்கு மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரியும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்