என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனி ஓர் அபாயகரமான வீரர் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்
Byமாலை மலர்18 Sep 2020 3:18 PM GMT (Updated: 18 Sep 2020 3:18 PM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அபாயகரமான வீரர் என்றால் அது டோனி தான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி ஓய்வு பெற்று விட்டார். எனினும், ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும்பொழுது, டோனி ஐ.பி.எல். தொடரில் வெற்றிகளை குவிக்க மிகுந்த ஆவலுடன் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். சுமார் 438 நாட்களுக்கு பிறகு டோனி நாளை கிரிக்கெட் களம் காண உள்ளார்.
ஐ.பி.எல். வரவலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது சென்னை அணி தான் என்றும் டோனி 4வது இடத்தில் களமிறங்கினால் அதிக ரன்களை குவிப்பது உறுதி என்றும் பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நாளை நடைபெறும் முதல் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணி சார்பில் டோனி விளையாடி அசத்த உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X