search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    ஆர்.சி.பி.-யை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை: விராட் கோலி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து வெளியே வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆர்.சி.பி. அணிக்காகத்தான் விளையாடி வருகிறார்.

    இவரது கேப்டன் பதவியல் கடந்த மூன்று வருடங்களில் 8-வது, 6-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்தது. 2016-ல் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறும் எண்ணம் வந்ததே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆர்சிபி அணிக்காக 12 வருடங்கள் விளையாடிள்ளேன். இது மிகவும் சிறப்பான பயணம். நம்பமுடியாதது. ஆர்சிபி அணிக்காக சாம்பியன் கோப்பையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் விரும்புகின்றனர். மூன்று முறை சாம்பியன் பட்டத்தை மகவும் நெருங்கி வந்துள்ளோம். ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போய்விட்டது.

    நாங்கள் எப்போதும் இணைந்து அதே நோக்கத்துடன்தான் சென்று கொண்டிருக்கிறோம். நான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அதற்கு அணி என் மீது வைத்துள்ள அன்பும், அக்கறையும்தான்.

    ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் நீங்கள் அதுகுறித்து உணர்ச்சிவசப் படலாம். ஆனால், விசுவாசம் ஆர்சிபி அணியோடு இருக்கும். ஆர்சிபி மிகவும் விசித்திரமானது.  ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்த நேரம் வரை, அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன்’’ என்றார்.
    Next Story
    ×