search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கார் யூனிஸ்
    X
    வக்கார் யூனிஸ்

    டெஸ்ட் போட்டிக்கு ஒரே பிராண்ட் பந்தை பயன்படுத்த வேண்டும்: வக்கார் யூனிஸ்

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஒரே பிராண்ட் பந்தை பயன்படுத்தினால்தான் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்காது என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பந்து நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து போன்ற நாடுகள் டியூக்ஸ் வகை பந்தையும், இந்தியா எஸ்.ஜி. பந்தையும், ஆஸ்திரேலியா கூக்கப்புரா பந்தையும் பயன்படுத்துகின்றன.

    இதனால் ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று விளையாடும்போது, பந்து வீச்சாளர்கள் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சிரமப்படுகிறார்கள்.

    இதனால் டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே ஒரே பிராண்ட் பந்துதான் என்பதை ஐசிசி உறுதிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘பல ஆண்டுகளாக நான் டியூக்ஸ் பந்திற்கு ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுவதும் ஒரு பிராண்ட் பந்தை பயன்படுத்த வேண்டும் நான் உணர்கிறேன்.

    அது எந்த பிராண்ட் என்பது முக்கியமல்ல. ஆனால், ஐசிசி இந்த முடிவை கட்டாயம் எடுக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் உலகின் பல்வேறு இடங்களில் விளையாடும்போது, மாறுபட்ட பந்துகளுக்கு ஏற்ப தங்களை  தயார்படுத்திக் கொள்வது கஷ்டம்’’ என்றார்.
    Next Story
    ×